இரண்டாம் திருமணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையையே இழந்த மனைவி! கண்டுக்கொள்ளாத இயக்குனர் பாலா?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாலா. சமீபகாலத்தில் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திரங்களில் பாலாவும் ஒருவர். கடந்த 4 ஆண்டுகளாக தன் மனைவி முத்துமலருடன் கருத்து வேறுபாடு வர சட்ட ரீதியாக பிரிய முடிவெடுத்து கடந்த மாதம் குடும்ப நல நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பிறகு சூர்யாவின் புது படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வரும் பாலா தன் மனைவியை பற்றி கவலைப்படாமல் மகளை மட்டுமே நினைத்து வாழ்ந்து வருகிறார். ஆனால் முத்து மலரோ, காதலித்து வந்த அரசியல் பிரமுகர் மகனுடன் இரண்டாம் திருமணம் செய்ய ஆசைப்பட்டு வாழ்க்கையையே இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முத்து மலர் முன்னாள் காதலனை நம்பி சென்று அவர் கடைசியில் அந்த காதலன் என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன். ஆனால் எந்த பிரச்சினையும் வந்ததில்லை இன்று உன்னால் அனைத்து பிரச்சினையும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
நீ இனிமேல் என்னை பார்க்கவோ பேசவோ வேண்டாம். நானே தோணும் போது கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டாராம். வருத்தத்துடன் சென்ற முத்துமலர் இரண்டாம் திருமணம் செய்யப்போகிறீர்களா என்ற கேள்வி அப்படியெல்லாம் கிடையாது என்று மழுப்பி வருகிறார். சமீபத்தில் கூட முத்துமலர் பார்த்தும் பார்க்காத மாதிரி சென்ற பாலா மகளை மட்டுமே பார்த்து அழுதுவிட்டு சென்றுள்ளார்.