மிரட்டி பணிய வைத்த நடிகைகள்!! கவுண்டமணியின் கள்ளக்காதல் லீலைகள்
தமிழ் சினிமாவில் காமெடி லிஜெண்ட் என்று அனைவரால் புகழப்பட்டு வரும்ர் நடிகர் கவுண்டமணி பற்றிய ரகசியத்தை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மது அருந்தும் பழக்கம் கவுண்டமணிக்கு இருந்தது. நடிகை ஷர்மிளி, கோவை சரளா, வாசுகி போன்ற நடிகைகளுடன் தொடர்பு இருந்தது. ஷர்மிளிக்கு ஒரு பிளாட் வாங்கி கொடுத்தார்.
வெள்ளை தோல் இருக்கும் அழகிகளை பிடிக்கும். நடன நடிகையாக இருந்த சர்மிளியை, தேர்வு செய்து தனக்கு ஜோடியாக சேர்த்து அறிமுகப்படுத்தினார். அவருடன் 50 படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தார் ஷர்மிளி. ஆவாரம் பூ என்ற படத்தில் நடிகை ஷர்மிளிக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்தும் அதனை தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்திருந்தேன்.
அப்படத்தின் டப்பிங்கிற்காக செல்லும் போது உள்ளே கவுண்டமணி குடித்துக்கொண்டிருந்தார். ஷர்மிளி ஊற்றிக் கொடுக்க அவர் மது அருந்தியபடி டப்பிங் பேசிக்கொண்டிருந்தார் கவுண்டமணி. அதன்பின் 3வது நாளில் ஒரு படத்தில் ஷர்மிளியும் நடிக்கவிருந்தோம்.
அப்போது பிரடொக்ஷன் மேனேஜர் என்னிடம் இன்று உங்களுக்கு ஷூட்டிங் இல்லை என்று கூறியதும், சந்தேகத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். அங்கு எனக்கு பதில் வேறொருவர் நடிக்க கவுண்டமணியிடம் நான் சென்று கேட்டேன்.
அதற்கு அவர், எத்தனை படத்தில் தான் ஷர்மிளிக்கு நீ புருஷனாக நான் கள்ளக்காதலனாக நடிப்பது போர் அடிக்குது என்று கூறினார். ஆனால் காரணமே அது கிடையாது. ஷர்மிளியை தூக்கிட்டு சுத்தியது தான். என்னிடம் கவுண்டமனி, உனக்கு எவ்வளவு கொழுப்பு, ஷர்மிளியை தூக்கிட்டு அங்க வாய் வைத்து இறக்குவ என்று பயில்வான் தன் பேட்டியில் கூறியுள்ளார்.