இரண்டாம் மனைவி மஞ்சுளாவுக்கு துரோகம் செய்தாரா விஜயகுமார்.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்..
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய பல உண்மைகளை யூடியூப்பில் பேட்டியளித்து பகிர்ந்து வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில் நடிகர் விஜயகுமாரின் தனிப்பட்ட மற்றும் மனைவி மஞ்சுளா பற்றிய சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். `விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், சொந்த சாதியில் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
விஜயகுமார் - முத்துக்கண்ணுவிற்கு அனிதா, கவிதா என்ற இரு மகள்கள் அருண் விஜகுமார் என்ற மகனும் பிறந்தனர். அருண் விஜய், விஜயகுமாரின் மூத்த தாரத்திற்கு பிறந்தவர் என்று யாருக்கும் தெரியாது. இரண்டாம் மனைவிக்கு 3 மகள்கள் பிறந்தனர். இவர்கள் என்ன படித்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் முதல் மனைவி மகள்களை டாக்டருக்கு படிக்க வைத்தார் விஜயகுமார். குட் லைட் தியேட்டரின் உரிமையாளர் மஞ்சுளா. விஜயகுமாருக்காக அந்த தியேட்டரை விற்று பணம் கொடுத்தார் மஞ்சுளா. தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த மஞ்சுளாவை திருமணம் செய்தார் விஜயகுமார்.
முதல் மனைவி மகள்கள் டாக்டருக்கு படிக்க வைத்தவர், இரண்டாம் மனைவி மகளுக்கு அதை செய்யவில்லை. அவர் நினைத்திருந்தால் மஞ்சுளாவின் மகள்களை டாக்டருக்கோ, வக்கீலுக்கோ படிக்க வைத்திருக்கலாம், ஆனால் அவர் அதை செய்யவில்லை.இரு பக்கமும் இரு மனைவியுடன் இருக்கும் சிலையை அவரது தியேட்டரில் வைத்திருக்கிறார் விஜயகுமார்.
வனிதாவினால் முகத்தில் கறிப் பூசிக்கொண்டார். என் அம்மாவின் சொத்து அந்த பங்களாவை எனக்கு பிரித்துக்கொடு என்று வனிதா கேட்டிருக்கிறார். இதனால் தான் தியா திருமண நிகழ்ச்சிக்கு வனிதாவை அழைக்கவில்லை என்று விஜயகுமாரின் குடும்ப ரகசியத்தை பயில்வான் பகிர்ந்திருக்கிறார்.