வெளிநாட்டு தொழிலதிபருடன் கும்மாளம் போட்ட பாலாவின் முன்னாள் மனைவி.. விவாகரத்து கடுவாளம் போட்டதே இவர்தான்
முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, 18 வருட திருமண வாழ்க்கை ஒருகட்டத்தில் முடிந்துள்ளது என்று விவாகரத்து செய்தியை வெளியிட்டார். கடந்த 4 ஆண்டுகளாக மனைவி முத்துமலருடன் ஏற்பட்டு வந்த மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்து தற்போது சட்ட ரீதியாக பிரிந்தனர்.
விவாகரத்து பேச்சு
ஒரு மகள் இருக்கும் நிலையில் பாலா முத்துமலரின் இந்த முடிவு தமிழ் சினிமாவையே அதிரவைத்தது. இந்நிலையில் இந்த விவாகரத்தில் பிரபலங்களின் மனைவிகள் நடிகைகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பிரபலங்கள் என்றாலே அனைவரும் நட்பாக பழகி எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.
அப்படி இயக்குனர்கள் நடிகர்களின் மனைவிகள், நடிகைகள் நட்புறவை வளர்த்து கொள்வார்கள். அப்படி பாலாவின் மனைவி முத்து மலர், ப்ரீத்தா விஜயகுமார், சினேகா, மீனா, ஜெயம்ரவி மனைவி ஆர்த்தி உள்ளிட்ட பலருடன் நட்புறவில் இருக்கிறார்.
தொழிலதிபருடன் நெருக்கம்
அவர்கள் அனைவரும் இணைந்து வெளியில் செல்வது, வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது என்று தங்கள் பொழுதை போக்கி வருவார்கள். அதாவது பாலாவின் திருமணத்திற்கு முன் மனைவி முத்து மலர் பிரபல அரசியல் பிரமுகரின் மகன் ஒருவருடன் காதலில் இருந்து வருகிறார் என்ற செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதையெல்லாம் பாலாவை திருமணம் செய்த பிறகு மறைத்து வைத்து வந்த முத்துமலர் தற்போது அவருடன் ஊர்சுற்றி வருவதாக சமீபகாலமாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்களுக்கு ஆட்கள் அணுப்பி வைக்கும் தொழிலதிபர் சுரேஷுடன் தொடர்பில் இருந்து வருகிறாராம் பாலாவின் முன்னாள் மனைவி. பின் இது தெரிந்து தான் பாலா சண்டை போட்டு விவாகரத்து கேட்டுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் சூர்யாவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளை பற்றியும் பயில்வான் கூறியுள்ளார்.