வரலட்சுமி திருமணத்திற்கு வராத அவரது அம்மா.. ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி. படத்தில் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடித்து அசத்திவிடுவார்.
சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் வரலட்சுமியின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சரத்குமாருக்கு போட்டியாக தான் சினிமாவில் நடிக்க வந்தார் வரலட்சுமி. இவர் போடா போடி படத்தில் சிம்புவுடன் நடிக்கும் போது அவருடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின் விஷாலை காதலித்தார், அதுவும் பிரேக் அப் ஆகிவிட்டது.
சமீபத்தில் நடந்த வரலட்சுமி சரத்குமார் திருமணத்தில் அவரது அம்மா சாயாதேவி கலந்துகொள்ளவில்லை. சாயாதேவியும ராதிகாவை ஏற்றுக்கொள்ளவில்லை.
வரலட்சுமியை ராதிகாவை அம்மா என ஏற்றுக்கொள்ளவில்லை.
வரலட்சுமியின் கணவர் நிக்கோலஸ் ஏற்கனவே விவாகரத்தானவர். அவருக்கு 18 வயதில் மகளும் இருக்கிறார். மகளின் திருமணத்திற்கு அம்மா வராதது அதிர்ச்சி தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.