நைட் பார்ட்டியால் மாறிப்போன வாழ்க்கை!! திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினேகா ஓப்பன் டாக்

Sneha Gossip Today Bayilvan Ranganathan
By Edward Apr 15, 2024 03:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

நைட் பார்ட்டியால் மாறிப்போன வாழ்க்கை!! திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினேகா ஓப்பன் டாக் | Bayilvan Shared Many Secrets About Actress Sneha

அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார். தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார். அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து அவருக்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், தன் வாழ்க்கை, ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதால் தான் மாறியது என்று சினேகா கூறினார் என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஒருமுறை மலையாள ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியை பார்க்க சென்றாராம்.

நைட் பார்ட்டியால் மாறிப்போன வாழ்க்கை!! திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினேகா ஓப்பன் டாக் | Bayilvan Shared Many Secrets About Actress Sneha

அப்போது சினேகாவை பார்த்த பலரும் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே இருக்கிறீர்கள் என்று கூறி முதன் முதலில் ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்களாம். அப்படம் பெரிதாக வெற்றியாகவில்லை. இதையடுத்து தமிழில் விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமாகி நல்லவொரு அடையாளம் கிடைத்தது என்று சினேகா கூறியதாக தெரிவித்துள்ளார் பயில்வான்.

You May Like This Video