ஒரே பொண்ணு போதாதுனு ரெண்டு வேணுமா! விவாகரத்து நடிகையை இணைத்த தளபதி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 படத்திற்கு பிறகு பல விமர்சனங்களையும் வதந்திகளையும் சந்தித்து வந்தார். இதனால் கணவருட விவாகரத்து என்ற செய்தி சென்று கொண்டிருக்கையில் திடீரென விவாகரத்து பெறுவதாக நாக சைதன்யாவும் சமந்தாவும் அறிவித்தனர்.
இதையடுத்து ஆன்மீக சுற்றுலா என்ற ஊர்சுற்றி வருகிறார் சமந்தா. அதேபோல் விளம்பர படங்களில் நடித்து காசு சம்பாதித்து வருகிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் என பாலிவுட், கோலிவுட் சினிமாவிலும் வெப் சீரிஸிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை இந்தியா என்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் படத்திற்காக தனியாக மால் செட் இருப்பதை அறிந்து பீஸ்ட் படத்தில் நீங்களா என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
விவாகரத்து பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.
