பண்ணை வீட்டில் மதுவிருந்து.. போதைப்பொருள் பயன்படுத்திய 103 பேர்!! சிக்கி தவிக்கும் 2 நடிகைகள்..

Gossip Today Indian Actress Actress Drugs
By Edward May 24, 2024 11:30 AM GMT
Report

பெங்களூருவில் உள்ள புறநகர் பகுதியில் பண்ணை வீட்டில் கடந்த 19 ஆம் தேதி மதுவிருந்து நடப்பதாக போலிசாருக்கு தகவல் தெரிய வந்ததால், அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியிருந்தனர். அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தியது கண்டறியபட்டது. மேலும் தெலுங்கு நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், ஐ டி நிறுவன ஆண், பெண் ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர், போதை விருந்தில் பங்கேற்றுள்ளது தெரியந்துள்ளது.

பண்ணை வீட்டில் மதுவிருந்து.. போதைப்பொருள் பயன்படுத்திய 103 பேர்!! சிக்கி தவிக்கும் 2 நடிகைகள்.. | Bengaluru Rave Party Actress Tested Positive Viral

தொழிலதிபர் வாசு என்பவரில் பிறந்த்நாள் அன்று விருந்து நிகழ்ச்சி ஏற்பட்டு செய்திருந்ததும், இதில் தெலுங்கு சினிமாத்துறையினர் பலர் கலந்து கொண்டதும் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தெலுங்கு நடிகை ஹேமா போதை விருந்தில் கலந்து கொண்ட தகவலும் வெளியாகியுள்ளது. அதற்கு ஹேமா மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு, அதில் நான் பெங்களூரில் இல்லை என்றும் ஹைதராபாத்தில் இருப்பதாகவும் தன்னை பற்றி வெளியாகும் செய்தி வதந்தி என்றும் கூறியிருந்தார்.

பண்ணை வீட்டில் மதுவிருந்து.. போதைப்பொருள் பயன்படுத்திய 103 பேர்!! சிக்கி தவிக்கும் 2 நடிகைகள்.. | Bengaluru Rave Party Actress Tested Positive Viral

அவரை போல் நடிகை ஆஷா ராயும் வீடியோவை பகிர்ந்து நான் சம்பவதன்று பண்ணை வீட்டில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் அங்கு போதைவிருந்து நடைபெற்றது பற்றி எனக்கு தெரியாது என்று கூறியிருந்தார். பின் நடிகை ஹேமா மது விருந்தில் கலந்து கொண்டதை உறுதி செய்து மேலும் சில தெலுங்கு நடிகைகள் பங்கேற்றதாக பெங்களூர் போலிஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் 103 பேரிடம், ரத்த மாதிரிகள் செய்யப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 86 பேர் போதை பொருட்களை பயன்படுத்தியதாக உறுதியான நிலையில், குறிப்பாக நடிகைகள் ஹேமா, ஆஷி ராய் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.

விவாகரத்துக்கு பின் அந்த பெண்ணுடன் தனுஷ்-க்கு இரண்டாம் திருமணம்!! கஸ்தூரி ராஜா எடுத்த முடிவு..

விவாகரத்துக்கு பின் அந்த பெண்ணுடன் தனுஷ்-க்கு இரண்டாம் திருமணம்!! கஸ்தூரி ராஜா எடுத்த முடிவு..

58 ஆண்கள், 27 பெண்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதால் அனைவருக்கும் குற்றப்பிரிவு போலிசார் விசாரணைக்கு ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு பின் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.