பானுபிரியாவை வர்ணித்த நடிகர்!! கன்னத்தில் பளார்விட்ட இயக்குநர்!! இப்படியொரு சம்பவமா?
பானுபிரியா
தமிழ் சினிமாவில் 80, 90களில் தன்னுடைய நடிப்பாலும் காந்தக்கண்ணாலும் ரசிகர்களை கவர்ந்து கொடிக்கட்டி பறந்த நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பானுபிரியா. தற்போது ஆளே தெரியாத அளவிற்கு எங்கேயும் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் நடிகை பானுபிரியா பற்றி நடிகர் பப்லு ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பொம்மை மாதிரி ஆடும்
அதில், நான் முதன்முதலில் சைட் அடித்த பெண் என்றால் பானுபிரியா தான். கே பாலச்சந்தர் இயக்கத்தில் வானமே எல்லை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்காக நாடோடி மன்னர்களே என்ற பாடல் காட்சியாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்பாடலில் ஒரு மூவ்வெண்ட் வரும் தலை வேற, ஜஸ்ட் வேற, இடுப்பு வேற, கால் வேற தனித்தனியாக தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடும். அந்த பாடலுக்கு பானுபிரியா ஆடியதை பார்த்து நான் மெய்மறந்து அப்படியே ரசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் என் பின்னால் யாரோ கை வைக்க, யார்ரா மச்சான் எல்லாம் தனித்தனியா ஆடுது என்று சொல்லியபடியே நான் திரும்பினால் பாலச்சந்தர் நிற்கிறார்.
திடீரென்று பளார் என்று கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அதோடு முண்டம் முண்டம்..என்னடா பண்ற போய் வேலையை பாரு என்று சொன்னார். அதை மறக்க முடியாது என்று பப்லு தெரிவித்துள்ளார்.