என்னய்யா அந்த சாதிக்காரன் எல்லாம் வந்துட்டான்னு இளையராஜாவை அசிங்கப்படுத்தினார்கள்!! பாரதிராஜா..
இசைஞானி இளையராஜா
தமிழ் சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து பல ஆயிரக்கணக்கான பாடல்களால் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரின் ஆரம்பகால வளர்ச்சியை பலர் முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஈடுபட்டதாக இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விவரித்துள்ளார்.
இளையராஜாவை அப்படி செய்வது சிங்கத்தை சிலந்து வலையில் அடைப்பது போன்றது, இன்றைக்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். நான் முதன் முதலில் ஹெல்த் இன்ஸ்பெக்ட்டராகத்தான் இளையராஜாவின் ஊருக்கு சென்றேன். அப்போதுதான் அவரது அறிமுகம் கிடைத்து, இசைக்கச்சேரி எங்கு நடந்தாலும் நானும் அவருடன் சென்றுவிடுவேன்.
இளையராஜாவுக்கு தலைவலி வந்தால் கறி சப்பிடுவார், சென்னைக்கு அவர் வந்தபோது ரங்கநாதன் தெருவில் ரூம் போட்டு தங்க வைத்தேன். நாங்கள் தங்கியிருந்த பகுதியில் பிராமணர்கள் அதிகம் என்பதால் எங்களை காலி செய்யச்சொன்னதால் தேனாம்பேட்டைக்கு சென்றுவிட்டோம்.
பள்ளன், பறையன்
வாய்ப்புதேடிக்கொண்டு இருந்தபோது பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவை அறிமுகம் செய்துவைத்தேன். அவரின் திறமையை பார்த்து மிரண்டுபோய், யானையை கவுத்து விடுவான் (எம் எஸ் விஸ்வநாதனை ஓரங்கட்டிவிடுவார்) என்று கூறியிருக்கிறார். அப்படி அன்னக்கிளி படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து எங்கு திரும்பினாலும் இளையராஜாவின் இசை ஒலித்தது.
அப்பொது சினிமாவில் இருந்து சொல நடிகர்கள் சினிமாவில் மிகவும் உயரிய பொறுப்பிலும் சாதியிலும் உயர்ந்தவர்கள், என்னய்யா, பள்ளன், பறையன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டான் என கூறினார்கள் என்று பாரதிராஜா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.