குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டாரா இளையராஜா மகள் பவதாரிணி!! அதிர்ச்சியளித்த பயில்வான்
பிரபல பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறித்த சில விசயங்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
மைடியர் குட்டிச் சாத்தான் படத்தில் குழந்தையாக பாடல் பாடினார். பல படங்களில் இசையமைத்தும் வந்திருக்கிறார் பவதாரணி. தான் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் ஃபிலிமாலையா அதிபர் ராமசந்திரனின் மகன் ஆர் சபரிராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்க்கை அவர் எதிர்ப்பார்த்தபடி அமையாமல் கணவரை விட்டு பிரிந்தார் பவதாரணி. அதனால் தான் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தாரா? இல்லையா? என்று செய்தி வெளியாகவில்லை.
இசைஞானியின் செல்லப்பிள்ளையாக இருந்தார். பித்தப்பையில் கல் இருந்து அதன்பின் புற்று நோய் ஏற்பட்டு சிறுநீரகத்திலும் பரவியது. 47 வயதில் தன் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு இறந்தார். பவதாரணிக்கு முன் பாடகி சொர்ணலதாவும் புற்றுநோயில் மரணமடைந்தவர் தான். மகளை சிகிச்சையளிக்க தவறிவிட்டார் இளையராஜா என்ற செய்தி எல்லாம் பொய். தன் சொத்தை வித்தாவது மகளை காப்பாற்ற நினைப்பவர் இளையராஜா. வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசக்கூடாது.
கெளதமி மாதிரி மார்ப்பில் புற்றுநோய் வந்து சரியாகினார். எல்லோருக்கும் அப்படி இருக்காது. கணவருடன் ஒன்றாக இருக்காதது கூட மன உளைச்சலுக்கு காரணம் என்பது எல்லாம் அப்படி கிடையாது. கணவருடன் மன முறிவு ஏற்பட்டவும் அப்பாவிடம் சொல்லியுள்ளார். அதற்கு இளையராஜா நீ எப்பவும் என்னுடன் இருக்கலாம் என்று கூறினார்.
இன்னொருவருடன் மனைவி என்ற பந்தத்தை மீறி நான் இளையராஜாவின் மகளாக சந்தோசமாக பவதாரணி இருந்தார். அது மன உளைச்சல் கிடையாது என்று பயில்வான் தெரிவித்துள்ளார். ஆனால் தன் மனைவியை காப்பாற்ற கணவர் சபரிராஜ் பல இடங்களுக்கு கூட்டிச்சென்று சிகிச்சை பெற வைத்திருக்கிறார். கடைசி வரை மனைவியை காப்பாற்ற போராட்டி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
