என் வாழ்க்கையில் நான் பண்ண தப்பு.. நான் குடிச்சது இதற்குத்தான்.. எமோஷ்னலாக பேசிய சக்தி..
பி வாசு மகன் நடிகர் சக்தி
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களை வைத்து மிகப்பெரிய படங்களை கொடுத்து டாப் இயக்குநராக திகழ்ந்து வந்தவர் இயக்குநர் பி வாசு. இவரது மகன் நடிகர் சக்தி பல படங்களில் நடித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் மது அருந்திவிட்டு காரை விபத்துக்குள்ளாக்கிய புகாரில் சிக்கி சில ஆண்டுகள் அப்படியே காணாமல் போனார். சமீபத்தில் தன் அப்பா பி வாசுவுடன் சேர்ந்து பேட்டியளித்திருக்கிறார்.
அதில் சின்ன வயதிலிருந்தே நான் தோல்வியை பார்த்ததே இல்லை. கொஞ்சம் வசதியான வீட்டுப்பையனாகவே வளர்ந்துவிட்டேன். எதிலுமே நான் ஃபெயில் ஆனது கிடையாது. நன்றாக எம்பிஏ வரை படித்தேன். 30 வருட சந்தோஷமான வாழ்க்கையை இந்த 8 ஆண்டுகள் அப்படியே என்னை புரட்டிப்போட்டது.
பிக்பாஸ் - குடி
கடந்த 10 ஆண்டுகளில் எல்லா பெயரையும் வாங்கிவிட்டேன், எங்க அப்பா அந்த ஷோவுக்கு போகவே வேண்டாம் என்றார், நான் தான் விடாபிடியாகப் போனேன். பிக்பாஸ் பார்த்ததே இல்லை, அதனால் அதன் ஆழம் தெரியாமல் போய்விட்டேன், அதுதான் நான் எடுத்த தவறான முடிவு.
இங்கே மூன்று காரணங்களுக்குகாக குடிக்கிறார்கள். பணத்திமிரில் குடிப்பவர்கள், வேலைக்குச் செய்த களைப்பு தெரியாமல் இருக்க குடிக்கிறார்கள், மன உளைச்சலுக்காக குடிக்கிறார்கள்.
பணத்திமிரில் குடிப்பவன் மறுநாள் அதை மறந்துவிடுவான், வேலைப்பளு மறக்கக் குடிப்பவன் சந்தோஷமாக ஒருநாள் இருந்துவிட்டு மறுநாள் வேலைக்குப் போவான். மன உளைச்சலால் குடிப்பவன் அதை நிறுத்துவது கடினம். நான் பணத்திமிரில் குடிக்கவில்லை, என் சந்தர்ப்ப சூழ்நிலை, பிரச்சனைக்காகக் குடித்தேன். அது என்ன பிரச்சனை என்று என் குடும்பத்திற்கு தெரியும், கடவுளுக்கு தெரியும்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முடங்கி இருந்த சமயத்தில் 2 ஆண்டுகள் கழித்து ரஜினி சார் என்னை பற்றி அப்பாவிடம் விசாரித்தார். என்னிடம் பேசிய அவர், இந்த சறுக்கல் எல்லா நடிகர்களின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது, என் வாழ்க்கையிலும் நடந்தது. நீ திரும்ப வருவ, உடனே வீட்டுக்கு வா என்று கூறினார். அவர் என்னை அழைத்து பேசவேண்டிய அவசியம் இல்லை, அவர் ஆறுதல் கூறினார். நான் அவரிடம் ‘நான் கமல் ரசிகன், ஆனால் உங்கள் வீட்டுப்பிள்ளை’ என்று கூறியதாக எமோஷனலாக சக்தி பகிர்ந்துள்ளார்.