வீட்டைவிட்டு வெளியே போகவுள்ள ஜிபி முத்து.. மனதை மாற்ற போராடிய பிக்பாஸ் குரல்..
விஜய் தொலைக்காட்சியில் 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த 9 ஆம் தேதி ஆரம்பமானது. 20 போட்டியாளர் வீட்டிற்குள் அனுப்பி ஆரம்பமுதலே சண்டை, நட்பு, போட்டி என பட்டையை கிளப்பி வருகிறது.
மகள், மகன், தம்பி
போட்டியாளரான ஜிபி முத்துவின் செயல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. அப்படி அவரின் எதார்த்தமான பேச்சும் நடத்தையும் சக போட்டியாளர்களையும் கவர்ந்திழுத்து வருகிறது.
இந்நிலையில் சில நாட்களாகவே மனதளவில் எதையோ நினைத்து சோகமாக இருந்து வருகிறார் ஜிபி முத்து. 6வது சீசனின் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜிபி முத்து வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறி வருகிறார்.
பிக்பாஸ் குரல்
மகள், மகன், தம்பியை பார்க்க வேண்டும் மனது படபடவென இருக்கிறது என்று புலம்பி வந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் குரல் அவரை கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்து பேசியிருக்கிறார்.
எவ்வளவோ பிக்பாஸ் சமாதானப்படுத்தி பார்த்தும் தன்னால் 20 நாள் மட்டும் தான் இருக்க முடியும் என்று அழுது கொண்டே ஜிபி முத்து கூறியுள்ளார்.
மேலும் ஜிபி முத்துவிடம் பேசியும் அவரால் இருக்க முடியாது என்ற ஒரே குறிக்கோளாக கூறியுள்ளார். இதுகுறித்து அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதலான வார்த்தையில் கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.
Part 3 Thalaivara Ippodi pakka kastam iruku #GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil pic.twitter.com/jh7nG26k86
— GP Muthu Army (@drkuttysiva) October 19, 2022