எல்லைமீறி இலங்கைப்பெண் ஜனனியையும் விட்டு வைக்காத அசல் கோளாரு.. திட்டித்தீர்த்தும் பிக்பாஸ் ரசிகர்கள்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் பிக்பாஸ் 6வது சீசன் துவங்கி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் நடந்த நாமினேஷன் லிஸ்ட்டில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்களில் போட்டியாளர்களிடையே கடும் போட்டியும் சண்டையும் நடைபெற்று வருகிறது.
இப்படியிருக்கையில் பெண் போட்டியாளர்களிடம் எல்லைமீறி அசல் கோளாரு நடந்து வருவது ரசிகர்களின் கோபத்தில் ஆழத்தியிருக்கிறது.
#Asal next target #Maheshawari
— #BiggBossTamil6 (@Biggboss_videos) October 17, 2022
#GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil #Varisu#Thunivu pic.twitter.com/IhnmShBZ4d
குயின்சி, மகேஷ்வரி, சாந்தி, மகாலட்சுமி, மைனா உள்ளிட்ட பல பெண் போட்டியாளர்களை தடவியும் கண்ட இடத்தில் தொட்டும் வருவது முகம் சுளிக்க வைத்து வருகிறது.
அப்படி இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து போட்டியாளராக களம் கண்டு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் ஜனனி.
அழகான தமிழ் பேச்சாளர் கவர்ந்து வரும் ஜனனி, கண்ணாடி முன் ஆடையை சரி செய்யும் போது பின்னால் வந்த அசல், ஜனனியின் முதுகில் கைவைத்து தடவியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரச்சிதாவை கண்டபடி கட்டிப்பிடித்துள்ள வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் பலர் கண்டபடி அசல் கோளாரை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.
