நட்ட நடுராத்திரியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! அதிரடி காட்டிய பிக்பாஸ் அல்டிமேட்.
பிக்பாஸ் 5 சீசனுக்கு பிறகு முதல் சீசன் முதல் கடைசி சீசன் வரை கலந்து கொண்ட முக்கியப்புள்ளிகளை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் ஆரம்பித்து வைத்தார். 14 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியின் பாதியிலேயே கமல் சில காரணங்களால் விலகினார்.
அவருக்கு பதில் நடிகர் சிம்பு அந்த பணியை செய்து வருகிறார். கடைசி வாரத்தில் இருப்பதால் பல கடின போட்டிகள் நடைபெறவுள்ளது. எப்போது யார் வெளியேற்றப்படவிருக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.
பாண்டியன், நிரூப், அபிராமி, ஜூலி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.
அந்தவகையில்,ம் தற்போது அபிராமி அர்த்த நடுராத்தியில் பிக்பாஸ் வீட்டினைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அதன் வீடியோவை கண்டு பலர் அப்செட்டாகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல் பிக் பாஸ் வீட்டில் விஷ பாட்டிலாக சுற்றி வரும் ரம்யா பாண்டியனும் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி வருகிறார். அபிராமிக்கு அடுத்தடுத்தா ரம்யா பாண்டியன் தான் வெளியேற்ற வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.