பிக்பாஸ் 7 டைட்டில் கைப்பற்றி இவர்கள் தான் காரணம்!! ஷகீலா கேட்டதற்கு பதில் கொடுத்த விஜே அர்ச்சனா..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 14 ஆம் தேதி ஞாயிற்று கிழமை இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளது. 106 நாட்கள் இருந்த விஜே அர்ச்சனா டைட்டில் வின்னராக கமல் ஹாசனால் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் மதிப்புள்ள தொகையும் 15 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையும் வழங்கப்பட்டது. தற்போது போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தப்பின் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி டைட்டில் வின்னர் அர்ச்சனா, நடிகை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில் கலந்து கொண்டு PR வைத்து தான் டைட்டில் வின் பண்ணது தான் காரணம் என்று கூறப்படுகிறது என கேட்டுள்ளார். அதற்கு அர்ச்சனா, நீங்களும் பிக்பாஸ் வீட்டுக்கு போய் இருக்கிறீர்கள். உங்களுக்கும் அந்த அனுபவம் என்னவென்று தெரியும். உங்களால் உள்ளே இருந்துக்கொண்டு வெளியில் நடப்பதை கண்ட்ரோல் பண்ண முடியும்.
அது எந்தவகையில் சாத்தியம் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரிந்திருக்கும் நீங்களுக்கு பிக்பாஸ்-கு போய் இருக்கீங்க. புகழ்பெற்ற தொலைக்காட்சி, புகழ்பெற்ற பிரடொக்ஷன், பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்திட்டு இருக்கிறார்கள்.
ஒருவேலை இப்படியும் டைட்டிலை வின் பண்ண முடியும் என்ற பச்சத்தில், அடுத்த சீசனில் எப்படி ஆட்கள், நான் இந்த ஷோ மூலம் என் வாழ்க்கையை மாற்றுக்கிறேன் என்ற மனநிலையில் எப்படி வருவார்கள். காசு கொடுத்தால் எல்லாமே பண்ணிவிடலாமே என்ற மனநிலையில் வந்துவிடுவார்கள்.
மக்கள் வாக்கு போட்டதை சந்தேகப்படுற மாதிரி இருக்கு. ஒருவர் ஜெயித்துவிட்டால், அவர் பற்றிய விமர்சனத்தை ஏதாவது ஒன்று சொல்லிகிட்டே இருப்பார்கள். அது ஜெயித்தாலும் தோத்தாலும் நடக்கும் என்று விஜே அர்ச்சனா தெரிவித்துள்ளார்.