என்னது ராஜுவிற்கு 50 லட்சம் இல்லையா? பிக்பாஸ் கொடுத்த சம்பளம் எவ்வளவு!
பிக்பாஸ் 5 சீசன் தற்போது இறுதி நாள் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவருகிறது. ராஜு டைட்டில் வின்னர் என்று அறிவித்து கோப்பையை கைப்பற்றியுள்ளார். அவரை தொடர்ந்து பிரியங்கா ரன்னராகவும், பாவ்னி, அமீர், நிரூப் அடுத்தடுத்த இடத்தினையும் பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் பரிசுத்தொகையாக பிக்பாஸ் வீட்டில் இருந்து பெற்றுச்சென்றுள்ளார் ராஜு. ஆனால் ராஜு உண்மையை இதைவிட பெரிய தொகையை வாங்கவுள்ளாராம்.
50 லட்சம் பரிசுதொகையோடு ஒரு வாரத்திற்கு 1.50 லட்சம் என்று பேசப்பட்டு 16 வாரத்திற்கு சுமார் 21 லட்சத்தை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 71 லட்சத்தை தட்டிச்சென்றுள்ளார். அவரை அடுத்து 2 லட்சம் என்று பேசப்பட்ட பிரியங்கா 30 லட்சத்தினை பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதுசார்ந்த செய்திகள்..பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்ற போட்டியாளர்.. 50 லட்சத்தை தட்டிதூக்கிய நபர்