ஆரம்பத்தில் எனக்கு அப்படி தான் இருந்துச்சு, அட்ஜெஸ்ட் செய்து தான் நடிச்சேன்!! பிக்பாஸ் நடிகை அர்ச்சனா கூறிய ரகசியம்..
விஜய் டிவியில் கடந்த ஆண்டு கமல் ஹாசனால் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு நிறைவடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் விஜே அர்ச்சனா. இந்நிகழ்ச்சியில் பல கோடி மக்களின் ஆதரவை பெற்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் அவர் அளித்த பேட்டியொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கப்போன ஆரம்பத்தில் இருந்தே எனக்கு சேலை கட்டத்தெரியாது என்றும் யாரையாவது கூப்பிட்டு தான் சேலையை கட்டச்சொல்வேன். அப்போது அவர்கள் கட்டிவிடும் போது புடவை தாறுமாறாக உடம்பில் சுற்றி விடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
அறிமுகமான போது எனக்கு புடவை கட்டத்தெரியாமல் அது ஒரு பக்கம் இது ஒரு பக்கமாக தொங்கிட்டு தான் இருக்கும். அதனை அட்ஜெஸ்ட் செய்து தான் நடிப்பேன்.
ஆனால் இப்போது நான் புடவை கட்டுவதில் எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டேன், என் வீட்டில் இருப்பவர்களுக்கு நான் தான் புடவையை கட்டிவிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார். வரும் மார்ச் 10 தேதி ரசிகர்களை நேரில் சென்று சந்திக்கவுள்ளார் என்பதால், அவர் சேலையில் வெளியில் வருவதற்கென்றே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.