இவுங்கெல்லாம் நாளைக்கு ஆட்சிக்கு வந்தால், சிரிப்பு தான் வருது..விஜய்யை கழுவி ஊற்றும் பத்திரிகையாளர்
Vijay
By Tony
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் உச்சத்தில் இருக்கும் போதே தீவிர அரசியலில் இறங்கவுள்ளார்.
இனி சினிமாவில் நடிக்கவும் மாட்டேன் என்று அறிக்கையும் விட்டுள்ளார். இந்நிலையில் விஜய்யின் வலது கையாக தற்போது செயல்பாடுவது புஸ்ஸி ஆனந்த் தான்.
இவர் சமீபத்தில் ஒரு விழாவில் விஜய் என்ற நபரின் பெயரை கூறாமல், தளபதி பெயர் கொண்ட நபர் என சொல்ல, இவை இணையத்தில் கேலி கூத்தானது.
தற்போது பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள், மிக கடுமையாக விஜய்யையும், புஸ்ஸி ஆனந்தையும் தாக்கியுள்ளார்.
இதில், இதெல்லாம் அடிமைத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். ஒருவரின் பெயரை சொல்லவே முடியாதவர்கள், நாளைக்கு ஆட்சிக்கு வந்து ஆட்சி பொறுப்பேற்பது நியாயமா, விஜய் ரசிகர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என கடுமையாக பேசியுள்ளார்.