ஜாதி பெயரை சொல்லி கவுதம் மேனனை தவறாக பேசிய ப்ளூ சட்டை மாறன்.. எல்லாமே வயித்தெரிச்சல் தான்
அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி சிம்பு நடித்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. ஆனால், இப்படத்தை கடுமையாகவும், தகாத முறையிலும் விமர்சனம் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.
ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய கவுதம்
இதனால் கடுப்பான இயக்குனர் கவுதம் மேனன் தக்க பதிலடியை அண்மையில் அளித்த பேட்டியில் கொடுத்துள்ளார். " ப்ளூ சட்டை மாறன் பற்றி பேசவே கூடாது என்று நினைக்கிறன். இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். எனக்கெல்லாம் பயங்கரமான கடுப்பு. எதற்கு இப்படி ஒரு விமர்சனம் செய்யவேண்டும். அவருக்கு காசு வரவேண்டும். அவருக்கு ஸ்பான்ஸர் வரவேண்டும் என்பதற்காக இப்படியா. நீங்க விமர்சனம் பண்ணுங்க, ஆனால் அதற்க்கு ஒரு எல்லை உள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தின் விமர்சனம் கூட மோசமாக பேசியிருந்தார். படம் ஹிட் ஆனாலும் விமர்சத்தில் தவறாக பேசிவிட்டு, எங்கேயோ ஒரு இடத்தில் படம் நல்ல இருக்குனு போய்டுவாரு. இதனால், எனக்கு இறங்கி ஏதாச்சும் செய்யலாமானு கோபம் வருது. மத்த இயக்குனர்களுக்கு வருதானு எனக்கு தெரியாது, ஆனா எனக்கு இறங்கி செய்யலாமானு கோபம் வருது " என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் பதிவு
இதற்க்கு ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார் " சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ்..மேனன் ". என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், மாறனை கண்டித்தும், கலாய்த்தும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.