பிரியாமணியிடம் எல்லைமீறிய ஸ்ரீதேவி கணவர்!! கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..
பருத்தி வீரன் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிரபலமானவர் நடிகை பிரியாமணி. இப்பம் கொடுத்த நல்ல இடத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார். இதனைதொடர்ந்து 2017ல் முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்த பிரியாமணி அதன்பின்பும் படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் சென்று நடித்து வரும் பிரியாமணி நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள மைதான் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் மைதன் படத்தினை பார்க்க படக்குழுவும் நேற்று சென்றுள்ளனர்.
அப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்திருக்கிறார். ஸ்பெஷல் ஸ்கிரீனிங் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ள நிலையில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி வந்த போனி கபூர் போட்டோ எடுக்கும் போது பிரியா மணியிடம் நெருக்கமாக நடந்து கொண்டிருக்கிறார்.
போனி கபூரால் பிரியாமணியும் சங்கப்பட்டு முகத்தை சுளித்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள், போனி கபூரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.