வாய்ப்பு கொடுக்கிறேன் என் ரூமுக்கு வா!! நடிகை ஷகீலாவிடம் அத்துமீறிய பிரபல நடிகரின் தந்தை..
மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார். பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7ல் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணத்திற்காக எலிமினேட் செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது நான் செய்த தவற்றை இல்லை என்று கூறுவதால் என்ன நடக்க போகிறது.
நான் செய்ததை ஆமாம் நான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு பயமும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் விசித்ராவுக்கு நடந்த பாலியல் சம்பவம் பற்றி எனக்கு தெரியும் என்றும் சக நடிகையாக அவருடன் நான் பயணித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு நேர்ந்த பாலியல் தில்லை குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். தெலுங்கில் நடிக்கும் போது நடிகர் அல்லரி நரேஷின் தந்தையும் இயக்குனருமான E. V. V சத்தியநாராயணன், என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததார்.
என் அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி என் அறைக்கு வா என்று கூறினார். நான் உங்கள் படத்தில் நடித்துவிட்டேன், என் சம்பளமும் வந்துவிட்டது. உங்களின் அடுத்த படத்தில் எனக்கு நடிக்கவிருப்பவில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகீலா.