உயிருக்கே ஆபத்தான சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய சீரியல் நடிகை
சைத்ரா ரெட்டி
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று கயல். இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் நேற்று இரவு ஷுட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது நள்ளிரவு 1 மணியளவில், நான் எனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தேன் - போரூர் மேம்பாலத்தில். டிடி சோதனை நடப்பதால் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மெதுவாக சென்றன.
நான் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது,மேலே மெட்ரோ கட்டுமானப் பணியின் போது திடீரென ஒரு பெரிய சிமெண்ட் கலவை என் காரின் மீது விழுந்தது. இதன் தாக்கம் அதிர்ச்சியளிப்பதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது.
அதிர்ஷ்டவசமாக எனக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் நடந்து சென்றிருந்தாலோ, இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தாலோ என்ன ஆகியிருக்கும் என அதிர்ச்சி அவர் ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார்.