கருக்கலைப்பு செய்ய வைத்து ஏமாற்றினார்..முக்கிய உடந்தையே தவெக வேட்பாளர் தானாம்!! நடிகை
நடிகை சாந்தினி
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் திருவள்ளூர் தொகுதி இப்போது ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. அதற்கு காரணம், அங்குள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருண்குமார் மீது நடிகை சாந்தினி கிளப்பிய பழைய விவகாரம் தானாம்.

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி, தனக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கும் இடையில் மோதல் 2021ல் நடந்தது. அப்போது மணிகண்டன் மீது ஏகப்பட்ட புகார்களை கொடுத்த சாந்தினி, தன்னைத் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதோடு, கட்டாயப்படுத்தி சிலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக கூறினார்.
தவெக வேட்பாளர்
அந்த சட்டவிரோதக் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த முக்கிய குற்றவாளி இப்போது தவெக வேட்பாளர் அருண்குமார் தான். தவெக, பெண்கள் பாதுகாப்பு என கூறுகிறார்கள், ஆனால் இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு ஆபத்தானவர்.

இந்த அருண்குமாரை போல மகாப்பாவி, கெட்டவன் உலகத்தில் இருக்க முடியாது, அதனால் மக்கள் உங்கள் ஓட்டு மிகவும் முக்கியம். பெண்கள் இந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள், தவெக வேட்பாளர் அருணுக்கு தயவு செய்து ஓட்டுப்போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.