14 வருட சினிமா வாழ்க்கை!! அப்படிலாம் பண்ணனும்னு ஆசை!! திருமணத்திற்கு பின் ஓப்பனாக பேசிய நடிகை சாந்தினி..
நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி. அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சாந்தினி, தற்போது சின்னத்திரையில் தாலம்பூ மற்றும் ரெட்டை ரோஜாவே போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.
அதன்பின், குடிமஹான், பொம்மை, சைரன் போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் ஆலகாலம் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சமீபகாலமாக கிளாமர் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
நான் கதையை கேட்கும் போது அந்த கேரக்டரை நான் ஏற்றுக்கொள்வேன். சும்மாலாம் கதையை கேட்டு பாதி மனநிலையில் ஓகே சொல்லமாட்டேன். பலவிதமான ரோலில் நடிக்க எனக்கு ஆசை. அதிலும் ரொமான்ஸ் கலந்து காமெடி இருக்கும் கதையில் நடிக்கவும் ஆசை. அப்படி ஒரு படத்திலும் நடிக்கவில்லை, எனக்கு வாய்ப்பும் வரவில்லை.
அதிகமாக கிளாமர் ரோல் எனக்கு வந்ததில்லை. குடும்ப பெண்ணாக இல்லாமல் சவாலான ரோலில் நடிக்க வேண்டும். கிளாமர் ரோலில் நடிக்க எனக்கு ஆசை தான். இரு வெப் தொடர்களில் நடித்து வருகிறேன். திருமண வாழ்க்கை நல்ல தான் போய் கொண்டு இருக்கிறது.
நான் என் வேலையை செய்கிறேன். போட்டோஷூட் செய்கிறேன் என் தொழில் அது. தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிக்காட்ட விரும்பவில்லை. சமீபத்தில் அவுட்டிங் சென்ற போது கூட போட்டோஸ் எடுக்கவில்லை என்று கணவருடன் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை சாந்தினி தமிழரசன்.