ஜிவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா சைந்தவி!! உண்மையை கூறிய பிரபலம்..
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷ், பிரபல பாடகி சைந்தவியை காதலித்து கடந்த 2013 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியில் சைந்தவி பற்றிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
இருவரும் எங்கும் சண்டை போடவில்லை, எங்கும் விவாதமும் செய்யவில்லை. என்ன மனகசப்போ தெரியாது அவர்களின் பிரிந்துவிட்ட செய்தி பெரியளவில் பேசப்பட்டது, அதற்காக ஜிவி பிரகாஷும் வருத்தப்பட்டார். பெரும் தொகையை ஜிவி பிரகாஷிடம் ஜீவனாம்சமாக வாங்க சைந்தவி திட்டம் போட்டார் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இதுகுறித்து இருவரும் பேசியிருக்கலாமே. ஜிவி பிரகாஷ் தன்னுடைய கோபத்தை எங்கும் வெளிப்படுத்தவில்லை, சைந்தவியும் எங்கையும் தவறாக பேசவில்லை. நாளைக்கே இருவரும் இணையலாம் இல்லையா?.
பெருந்தொகையை சைந்தவி ஆட்டையை போட இதுபோல் செய்கிறார் என்று கூறுவதெல்லாம் கட்டுக்கதை. ஜிவி பிரகாஷின் தந்தை, தங்கை இருப்பது சைந்தவி விரும்பவில்லை என்று எனக்கு வந்த செய்தி.
அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. நடிகையுடன் ஜிவி பிரகாஷ் நெருக்காக நடித்தது பிடிக்கவில்லை என்று சைந்தவி நினைத்திருந்தால் அது பென்சில் படத்திலேயே விவாகரத்து செய்திருக்கலாமே, இது காரணம் கிடையாது என்று செய்யாறு பாலு பதிலளித்துள்ளார்.