விவகாரத்து செய்வதாக வாக்கு கொடுத்த ஆர்யா! மனைவியை வைத்து மோசடி செய்கிறார்களா?
சினிமாவில் நடிகைகள் நடிகர்கள் சக பிரபலங்களை காதலித்து திருமணம் செய்த ஜோடிகளில் ஒருவர்களாக இருப்பவர்கள் ஆர்யா - சாயிஷா ஜோடிதான். கஜினிகாந்த் படத்தின் மூலம் ஆரம்பித்து தற்போது பெண் குழந்தை பெற்றுள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் குறிப்பிட்டு புகாரளித்திருந்தார்.
பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்னும் நடிகையுமான சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படம் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் என வாதிட்டார்.
பின் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ல் ஒத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        