பீச்சில் என்னுடைய இடுப்பை ஒருத்தன் பிடித்தான்!! சீரியல் நடிகை அன்ஷிதா ஓப்பன் டாக்
மலையாளத்தில் இருந்து தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை அன்ஷிதா அக்பர்ஷா. தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சீரியல் நடிகர் அர்னவ் - நடிகை திவ்யா விவாகரத்துக்கு நடிகை அன்ஷிதா தான் காரணம் என்று திவ்யா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகை அன்ஷிதா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கோபத்தில் ஒருவரை அடித்திருக்கிறேன் என்று ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். பீச்சில் ஒரு பார்க் என்னுடைய உறவினர் பையன் எடுத்து நடத்தி இருந்தார்.
அப்போது வரிசையில் நடந்து செல்லும் போது ஒருத்தன் என் இடுப்பை பிடித்துவிட்டான். யார் என்று பார்க்காமல் அப்படி கன்னத்தில் அடித்துவிட்டேன் என்று அன்ஷிதா ஓப்பனாக பேசியிருக்கிறார். விளம்பரத்திற்காக 50 ஆயிரம் சம்பளமாக கேட்பேன் என்று கூறியிருக்கிறார்.