கோடிக்கணக்கான சொத்து!! தொழிலதிபரை வளைத்து போட்ட நடிகை அசின்..
இந்திய சினிமாவில் தனது 15 வயதில் நடிகையாக அறிமுகமாகி திரைப்பயணத்தை துவங்கியவர் நடிகை அசின். பின் 18 வயதில் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து பெரியளவில் வெற்று பெற்று புகழின் உச்சிக்கே சென்றார். இதனை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகையாக மாறினார்.
பின் விஜய், அஜித், கமல், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பின் தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். தற்போது நடிகை அசின் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அழகான குழந்தை, கோடீஸ்வர கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார் அசின். அவரது கணவர் ராகுல் ஷர்மா மைக்ரோமேக்ஸ் இன்பர்மேட்டிக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். கஜினி படத்தின் போது தான் அசினுக்கும் அவரது கணவருக்கும் காதல் வந்தது.
அக்சை என்பவர் தான் நடிகை அசினுக்கு தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அசின் நடிகை என்று முன்பே ராகுலுக்கு தெரியும், ஆனால் ராகுல் ஷர்மா தொழிலதிபர் என்று அசினுக்கு தெரியாது. பின் தான் அசினுக்கு அவர் பெரிய தொழிலதிபர் என்றும் கோடீஸ்வரர் என்றும் தெரிந்திருக்கிறது.
அதன்பின் அவரின் பணிவு, பண்பை பார்த்து அசின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவரை போல் அசினும் நல்ல பணக்கார குடும்பம் தான். கேரளாவில் சொந்தமாக ஒரு அணையே இருக்கிறது என்று அசினின் அப்பா பேட்டியில் கூறியிருக்கிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் கதையை நன்றார் தேர்வு செய்து நடித்து வந்தார் அசின்.
டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த போது திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்போது தன் கணவரின் கம்பெனி நிர்வாகத்தை இணைந்து செய்து வருகிறார். குழந்தை பிறந்தப்பின் குடும்பம் குழந்தை என்று இல்லற வாழ்க்கையை மகிச்சியுடன் வாழ்வதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.