குக் வித் கோமாளி 7ல் நடந்த அடுத்த சம்பவம்!! கதறி அழுத ரோஜாவுக்கு அடி மேல அடி..
குக் வித் கோமாளி 7
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. அதன் 7வது சீசன் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் தற்போது சர்ச்சைகளாலும் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், மாகாபா, புகழ், கானா வினோத் மீது தன்னை தாக்கியதாக கூறி போலிஸில் புகாரளித்தது தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த வார குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ வெளியாகி நெட்டிசன்கள் இடையே பேசுபொருளாகியுள்ளது.
அழுத ரோஜா
இந்தவாரம் நம்ம வீட்டு கல்யாணம் என்ற டாஸ்கின் போது, போட்டியாளர் அரவிந்த் சேசு, தன்னுடைய திருமணத்திற்கு அப்பா, அம்மா வர முடியாத நினைவால, தன் சட்டையில் தன்னுடைய பெற்றோர், மனைவியின் புகைப்படங்களை அச்சிட்டு கொண்டு வந்தார். அதை பார்த்த புகழ், அப்பாவை நினைத்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

இதை பார்த்த நடுவர் ரோஜா, புகழ் நீ அழுறதை பார்க்கும்போதே எனக்கும் அழகை வருது, எனக்கு என் அப்பாவை ரொம்ப பிடிக்கும், ஆனால் அவர் என் கல்யாணத்தை பார்க்கவே இல்லை, அதனால் அப்பாவை பற்றி பேசினாலே எனக்கு அழுகை வந்துவிடும் என்று கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
ரோஜாவின் அழுகை சற்று நடிப்பது போல் இருப்பதாகவும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் தற்போது அழுகாச்சி சீரியல் போல் மாறிவிட்டது என்றும் டிஆர்பிக்காக இப்படி செய்கிறார்களே என்றும் கலாய்த்து வருகிறார்கள்.