சிம்புவுக்காக இத்தனையும் செய்த நடிகர் கூல் சுரேஷ்.. கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு பின் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.
வெந்து தணிதது காடு பிரமோஷன்
கடந்த 15 ஆம் தேதி தியேட்டரில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்காக கடந்த 2 ஆண்டுகளாக சிம்புவின் படத்திற்காக பிரமோஷன் செய்து வருகிறார்.
வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்த போடு என்ற வசனம், வெளியாகும் அனைத்து படங்களுக்கு சென்றும் பிரமோசன் செய்து வந்தார் நடிகர் கூல் சுரேஷ். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்த கூல் சுரேஷுன் கார் ரசிகர்களால் உடைக்கப்பட்டது.
கூல் சுரேஷ் அழுகை
ஆடி காரின் முன் கண்ணாடி நொருக்கப்பட்டதால் சில லட்சம் அபராதமாக காரை வழங்கியவருக்கு கொடுத்திருந்தார். இதுகுறித்து கூல் சுரேஷ் கதறி அழுதபடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
என்னை யாரும் அடிக்கவில்லை, காரை உடைக்கவில்லை. என்மேல் ரசிகர்கள் வைத்த அன்பால் கார் மீது ஏறினர். இதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஒருவன் வளருவது பிடிக்கவில்லையா என்று தெரிவித்துள்ளார்.
இதை நான் சிம்புவுக்காக தான் இப்படி செய்தேன், பணம் சம்பாதிக்க அல்ல என்றும் கூறி அழுதுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.