கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க! சென்னை, மும்பை, பெங்களுர் அணியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!
ஐபிஎல் 2022 லீக் போட்டிகள் மார்ச் 26 ஆம்தேதி முதல் ஆரம்பமானது. கொரோனா தொற்றுக்கு பின் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்த நிலையில் நேற்று சென்னை சிஎஸ்கே அணியுடன், கல்கத்தா அணி மோதியது.
சென்னை படுதோல்வி:-
சென்னை ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தியாக தோனி கேப்டனில் இருந்து ஜெடேஜா பதிவி ஏற்றது தான். இருந்தாலும் தோனி இருக்கிறார் என்ற நம்பியுடன் இருந்த ரசிகர்களுக்கு தோல்வி தான் மிச்சம். துவக்க வீரர்களின் மோசமான ஆட்டத்தினால் 131 ரன் இலக்கினை கல்கத்தா அணியினர் புரட்டி போட்டு அடுத்து வெற்றியை பெற்றனர். இதனை நெட்டிசன்கள் கலாய்த்தும் வந்தனர்.

மும்பை கேவளமான தோல்வி:-
எப்போதும் சென்னையுடன் மும்பை தான் மோதும். ஆனால் இந்த ஆண்டு டெல்லியுடன் மோதியிருக்கிறது. ரோஹித் சர்மா தலையில் ஆடிய இந்த அணி ஆட்டத்தினை நன்றாக வெளிப்படுத்தினாலும் பவுளிங்கில் பல்ப்பு வாங்கிட்யது. டெல்லி அணியினர் வெற்றி பெற்று கிண்டலுக்கு சென்னைக்கு அடுத்த லிஸ்ட்டில் இணைந்தனர்.
பெங்களூர் வெற்றியா தோல்வியா:-
சென்னை அணியில் இருந்து பெங்களூருக்கு மாறிய டூபிளஸ்ஸி பஞ்சாப் அணியினரின் பவுளர்களை மிரட்டவிட்டு 88 ரன்கள் சேர்த்து மொத்தம் 200 ரன்களை சேர்த்தது பெங்க்ளூர். இதைதொடர்ந்து ஆடிய பஞ்சாப் ஆரம்பத்தில் சறுக்கினாலும் அசார், ஓசியன் இருவரும் இணைந்து அசாட்டாக வெற்றியை பெங்களூரிடமிருந்து பறித்தனர்.
மூன்று அணியும் மிகப்பெரிய அணியாக இருந்து முதல் போட்டியே இப்படி சொதப்பல் செய்ததை நெட்டிசன்கள் வேற லெவலில் கலாய்த்து மீம்ஸ் ட்ரோல்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.







