விஜய்யுடன் டான்ஸ் ஆடும் போது கொடுத்த முத்தம்!! வெட்கப்பட்டு பேசிய டான்ஸ் மாஸ்டர் சாந்தி..
90-ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடன இயக்குனர்கள் பணியாற்றிய படங்களில் டான்சராக நடனமாடிய கலைஞர்களில் ஒருவராக இருந்து தற்போது டாப் டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்து வருபவர் சாந்தி. முன்னணி நடிகர்களின் படங்களில் நடனமாடி வந்த சாந்தி, சீரியல்களிலும் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் பிக்பாஸ் 6 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது இலக்கியா, சக்திவேல் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிர்ய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பத்ரி படத்தில் நடிகர் விஜய்க்கு கொடுத்த முத்தம் பற்றி பகிர்ந்துள்ளார்.
பத்ரி படத்தில் கிங் ஆஃப் சென்னை என்ற பாடலில் நடனமாடியது ஜாலியாக இருந்தது. பிரபு தேவா மாஸ்டராவது டப்புன்னு எதாவது சொல்லி ஆடவைப்பார். ஆனால் ராஜு மாஸ்டர் அப்படி சொல்ல மாட்டார். பெண்களிடம் அதிகமாக பேசவேமாட்டார். உயரமா யாராது பெண் இருந்தால் பக்கத்தில் கூட வரமாட்டார், அங்க போய் நில்லுன்னு சொல்லிவிடுவார்.
அந்த பாடலில் எனக்கு நிறைய சோலோ கொடுத்து ஆட வைத்தார். அப்படி ஒரு ஷாட்டில் விஜய் சாருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்திருப்பேன். ஐய்யோ, அப்பவே நமக்கு அவர் கிரஷ் என்பதால், முத்தம் கொடுக்க சொன்னதும், நான் ஓகே என்று சொல்லிவிட்டேன்.
உடனே ராஜூ மாஸ்டர், பாத்து விஜய், டக்குன்னு திரும்பி போறீங்க, உதட்டில் கொடுத்துவிடுவேன்னு கலாய்த்துவிட்டார், அப்போது தான் அதிகமாக விஜய் சிரித்து பார்த்தேன் என்று மாஸ்டர் சாந்தி பகிர்ந்துள்ளார்.
You May Like This Video