திருமணமாகி 6 ஆண்டுக்கு பின் கர்ப்பம்!! வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நடிகை தீபிகா படுகோன்
பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்பும் இருவரும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன் நடிகை தீபிகா படுகோனுக்கும், அவருடைய கணவர் ரன்வீர் சிங்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மனைவி என்று கூட பாராமல், கன்னத்தில் அறைந்துவிட்டதாகவும் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை பிரபல திரைப்பட விமர்சகரான உமைர் சந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். திரையுலக நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்து வரும் இவர் கூறியுள்ள, நிலையில், தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கும் செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதாக நடிகை தீபிகா படுகோனே அவரது சமுகவலைத்தள பக்கங்களில் செய்தியை பகிர்ந்திருக்கிறார்.
இத்தனை மாதங்களாக மூடி மறைத்திருக்கும் தீபிகாவின் அந்த பதிவிற்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.