பழிவாங்க மாமனார் செய்ற வேலையா இது!! தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விசயத்தில் ரஜினிகாந்த் மன உளைச்சல்..
தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தார். அதற்காக கடந்த 2022 ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் அறிக்கை மூலம் தனித்து வாழ்வதாக தெரிவித்தனர். அதை அறிவித்த 2 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றது பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. இதுகுறித்து பல பத்திரிக்கையாளர்கள் பல விசயங்களை கூறி வரும் நிலையில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பயில்வான்
அப்பா பேச்சை கேட்டு நடக்காத ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்பா பேச்சை கேட்கும் தனுஷ். 18 ஆண்டுகள் திருமணமாகி யாத்ரா, லிங்கா என இரு மகன்களை பெற்றெடுத்து அதன்பின் பிரிகிறோம் என்ற முடிவை எடுத்தார்கள். இருவரும் ஒரே ஹோட்டலில் தான் இருந்தார்கள். இருவரும் பேசி நாம் பிரிவோம் என்று அறிக்கை வெளியிட்டனர். அந்நேரத்தில் ரஜினி குடும்பத்திற்கும் கஸ்தூரி ராஜா குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஒருபுறம் செளந்தர்யா விவாகரத்து என்று பார்த்தால் ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெறுகிறாரே என்று மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். அப்போது எல்லோரும் கூடி பேசி விவாகரத்து பண்ண கூடாது என்று ரஜினி சொல்லியதை நான் கூட நம்பிவிட்டேன். யாத்ரா, லிங்கா இருவரும் விசயம் என்ன என்று புரிந்துகொள்பவர்கள். இருவரும் அப்பா, அம்மாவிடம் சகஜமாக இருந்து வருகிறார்கள்.
லால் சலாம் படத்தின் போது நான் இப்போதைய என் வாழ்க்கையில் உறுதியாக இருக்கிறேன். என் கணவரை விட்டு பிரிந்தது, பிரிந்தது தான் என்று அறிக்கை வெளியிட்டார் ஐஸ்வர்யா. இது தனுஷ் குடும்பத்தை பாதித்தது. ரஜினி இரு மகள்கள் எப்படி விவாகரத்தோ, அதேபோல் கஸ்தூரி ராஜா மகன்களும் விவாகரத்து பெறுகிறார்கள்.
மரியாதை இழந்த கஸ்தூரி ராஜா
ஏற்கனவே ரஜினி பெயரை சொல்லி ஒரு இடத்தில் கஸ்தூரி ராஜா செய்த செயலால், எனக்கு அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டார். இதனால் கஸ்தூரி ராஜாவிற்கு அதிர்ச்சியளிக்க, ரஜினி - கஸ்தூரி ராஜா பேச்சுவார்த்தை இல்லை. இதனால் தான் தனுஷ் பல கோடியில் பங்களா கட்டியிருக்கிறார். விவாகரத்து என்று கூறியதும் ரஜினிகாந்த் கண்டுக்கொள்ளவில்லை.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மாமனாருக்கு மரியாதை கொடுக்கவில்லை. இதனால் கஸ்தூரி ராஜா தான் தனுஷை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு கல்யாணம் செது கொள் என்று கூறியிருக்கிறாராம். ஆனால், ரஜினிகாந்த் - லதா, மகள் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கூறி விவாகரத்து செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யா அதெல்லாம் முடியாது, விவாகரத்து செய்வென் என்று கூறிவிட்டார். இதனால் ரஜினிகாந்த்க்கு இப்படி சோகம் நடந்துள்ளது.
அம்மாவிடம் இருப்பதா? அப்பாவிடம் இருப்பதா? என்று யாத்ரா, லிங்காவிடம் நீதிமன்றத்தில் கேட்கப்படும். அப்போது இருவரும் கஷ்டப்படுவார்களே என்று ஐஸ்வர்யா நினைக்கவில்லை. ஆனால் தனுஷ் எவ்வளவோ இறங்கி வந்தும் ஐஸ்வர்யா கேட்கவில்லை. தனுஷ் மீது தவறில்லை, எல்லாமே ஐஸ்வர்யா மேல் தான் தப்பு என்று பயில்வான் தெரிவித்திருக்கிறார்.