விவாகரத்துக்கு பின் மகன்களுக்காக எமோஷனலாக பாடிய தனுஷ்! வைரலாகும் வீடியோ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 வருடங்கள் கழித்து பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.
இருவரும் மனப்பூர்வமான இந்த முடிவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த செய்தி மிகப்பெரியளவில் அதிர்ச்சியை கொடுத்தது. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடத்தும் ராக் வித் ராஜா என்ற லைவ் கார்ன்செர்ட்டில் இசைஞானி இளையராஜா முன்னிலையில் நடத்தப்பட்டது.
பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் இளையராஜா மேடையில் தனுஷை அழைத்து நிலா அது வானத்து மேலே பாடலை பாட அழைத்தார். அப்பாடலை யுவன் சங்கராஜாவுடன் இணைந்து பாடியப்பின் தனுஷ் இளையராஜாவிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்.
இந்த பாடலை கேட்டப்பின், இப்பாடலால் எனக்கு ஒரு தாலாட்டை மிஸ் பண்ணிட்டோமே என்று எனக்குள்ளே ஒரு ஆதங்கம் இருந்தது. அதனால் யாத்ரா லிங்காவை வைத்து ஒரு வரிகளை எழுதி பாடலாம் என்று இருக்கிறேன் என கூறியுள்ளார்.
அனுமதி வாங்கி பாடிய தனுஷ் பாடியபோது மிகவும் எமோஷனலாகவும் கண்ணீர்விடவும் வைத்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
This is so cute!!! But here I'm really getting emotional!!! Just see he's eyes ...we can see from how much pain he's suffering from!
— Dhanush North FC ?? (@DhanushNorthFC) March 19, 2022
We're always there with you thalaivaa @dhanushkraja ❤️❤️#RockWithRaaja #Dhanush #Vaathi pic.twitter.com/j62X27rI2B