இணையத்தில் எழுந்த சர்ச்சைகள்.. முற்றுப்புள்ளி வைக்கபோகும் தனுஷ்!!
ஒரு பக்கம் இயக்கம் மறுபக்கம் நடிப்பு பிஸியாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் தனுஷ். அண்மையில் இவர் இயக்கி நடித்திருந்த ராயன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தற்போது தெலுங்கில் குபேரா என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதனை அடுத்து இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இது பற்றிய அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்திய சினிமாவே ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தை தனுஷ் திரைக்கதையை அமைக்கஇருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் என்ட்ரிக்கு பிறகு இளையராஜாவின் மனநிலை எப்படி இருந்தது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.
ஏ.ஆர் ரஹ்மான் இளையராஜா இடையே மோதல் ஏற்பட்டது போன்ற பல வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் இளையராஜா எப்போதும் ஏ.ஆர் ரஹ்மான் மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்.
அதுமட்டுமின்றி ஏ.ஆர் ரஹ்மானின் வளர்ச்சி இளையராஜாவிற்கு மகிழ்ச்சியை தான் கொடுத்ததாம். இந்த விஷயத்தை படத்தில் அப்படியே காட்ட தனுஷ் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.