வெட்கமா இல்லையா!! நயன் - விக்னேஷ் விவகாரத்தில் தனுஷ் என்னை அப்படி திட்டினார் நடிகை ராதிகா...
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமா பாலிவுட் சினிமாவை சார்ந்த நட்சத்திரங்களுடன் நேரடியாக நட்பாக பழகி வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். 80, 90களில் கலக்கி வந்த நடிகை ராதிகா தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மா மற்றும் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் குறிப்பிட்ட ஒரு படத்தினை விமர்சித்து ஒரு கருத்தினை கூறியிருந்தார். இதனைதொடர்ந்து நடிகை ராதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷ் தன்னிடம் கால் செய்து பேசிய ஒரு சம்பவத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார். நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலிக்கும் போது, இதனை அறிந்த தனுஷ் தனக்கு கால் செய்து இருவரும் கல்யாணம் செய்யப்போகிறார்கள் தெரியுமா உங்களுக்கு என்று கேட்டார்.
கேட்டதும் ஷாக்காகி என்னடா விளையாடாதே, நான் இப்போது தான் அவர்களின் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தேன் என்று தனுஷிடம் கூறினேன். அதில் கடுப்பான தனுஷ், உங்களுக்கு வெட்கமா இல்லையா? பெரிய நடிகைன்னு சொல்றீங்க, இதைக்கூட உங்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லையா என்று திட்டியபடி கூறினார்.
எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகிவிட்டது. இருவரும் உண்மையான நடிகர்கள் தான், எந்த இடத்திலும் இருவரும் முறைத்தவறாமல் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி வந்ததால் எங்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று ஷாக்கான ரியாக்ஷனும் கூறியிருக்கிறார் நடிகை ராதிகா.