எப்போது தலைவர் தான் முக்கியம்!! மனைவியை விட்டு பிரிந்தும் தனுஷ் செய்த செயல்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிடுவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். அதன்பின் தன் படங்களில் ஐஸ்வர்யாவும் தனுஷும் கவனம் செலுத்தி வந்தனர்.
கணவரை பிரிந்த பின் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணாவை வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வந்தார். அப்படத்தில் தன் அப்பா ரஜினிகாந்தை சிறப்பு தோற்றத்திலும் நடிக்க வைத்தார். லால் சலாம் படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதை அடுத்து படம் வருகிற 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் இப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தன் முன்னாள் மனைவி இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தின் டிரைலரை பார்த்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் எப்போது போல் அவரது தலைவர் ரஜினிகாந்திற்கு தான் வாழ்த்து கூறியிருக்கிறார். படத்தின் குழுவினர்க்கு வாழ்த்து என்று கூறி சூப்பர் ஸ்டார் தலைவா என்ற டேக்கையும் பதிவிட்டு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
இதனை நெட்டிசன்கள் பலர் ஆறுதலான கருத்தினை தெரிவித்து இருந்தாலும், ஐஸ்வர்யா பெயரை குறிப்பிடாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
