விவாகரத்துக்கு பின் தனுஷ் வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்ல விஷயம்! துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் பல வெற்றிகளுக்கு பிறகு மாறன் படத்தின் தோல்வியை சந்தித்தார்.
ஏற்கனவே திருமண வாழ்க்கையில் 18 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்ற பிரச்சனையில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கும் தனுஷ் அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அப்படி பல தோல்விகளுக்கு பிறகு தனுஷ் பல ஆண்டுகள் கழித்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். விறுவிறுப்பாக சென்ற இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து மற்ற பணிகளை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் விவாகரத்துக்கு பின் திருச்சிற்றம்பலம் படத்தால் தனுஷுக்கு ஒரு பெரிய நல்லது நடக்கவுள்ளது. அதாவது படம் வரும் ஜூலை முதல் வாரத்தில் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது என்று படத்தினை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஒரு வழியாக படம் சீக்கிரமே வெளியாகுவதை அறிந்து தனுஷ் ரசிகர்கள் குஷியில் இருந்து வருகிறார்கள்.