தமன்னா டான்ஸ் ஆடுனா படம் ஹிட்!! மன்னிப்பு கேட்ட இயக்குனர் பார்த்திபன்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அந்த பேட்டிகளில் பகிர்ந்துகொண்டார். இந்த நிலையில், ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன் "ஒரு படம் நல்லா ஓடுறதுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான காரணமாக தமன்னாவின் நடனம் அமைந்துவிடுகிறது.
அதற்கு பிறகு தான் அப்படத்தில் இருக்கும் கதை" என பேசியுள்ளார். பார்த்திபன் கூறியது ரஜினியின் ஜெயிலர், படத்தையும், சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தையும் என கூற நெட்டிசன்கள் இதனை வைரலாக்கியதை தொடர்ந்து, இது குறித்து பார்த்திபன் விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
அதில், ”நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்.
நண்பர்களே!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 19, 2024
ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும்
மன்னிக்க வேண்டுகிறேன். pic.twitter.com/lq9MtIXBvo