மீண்டும் விவாகரத்து சர்ச்சை!! மாமனார் குடும்பத்தை ஒதுக்கி மகளுடன் தனியாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய்..
1994-ன் உலக அழகி பட்டத்தை வென்றவராகவும் இந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். மணிரத்னமால் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து பெரிய அந்தஸ்த்தை பெற்று வந்தார். கடந்த 2007ல் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சினிமாவில் இருந்து விலகி ஆராத்யா என்ற மகளையும் பெற்று வளர்த்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் நடிப்பில் கவனம் செலுத்திய ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்நிலையில், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்த போது அவர் விரல் மோதிரம் போட்டதில் இருந்து எப்போது மோதிரம் இல்லாமல் வந்ததில்லை. ஆனால், சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மோதிரம் இல்லாமல் வந்துள்ளார்.
இதனால் ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனும் சண்டை அதனால் இருவரும் பிரியப்போகிறார்களோ என்ற சந்தேகம் எழுத்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் விவாகரத்து சர்ச்சை கிளம்பி இருக்கிறது. மும்பையில் நடைபெற்ற முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு, அபிஷேக் பச்சன் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் தனியாக சென்றுள்ளார். கணவர் குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய் வராமல் தனியாக சென்றிருப்பது தான் இப்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று கூறியது எல்லாம் உண்மை தானோ என்று பாலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

