யாரையும் நம்பாதீங்க, யார் கவிழ்ப்பார்ன்னு சொல்ல முடியாது!! செல்வராகவன் உருக்கம்...
Twitter
Selvaraghavan
Tamil Directors
X
By Jai
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் தற்போது நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் செல்வராகவன். மென்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தினை இயக்கியும் வருகிறார்.

இதற்கிடையில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள செல்வராகவன், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருவார். அவரின் பதிவில் சூசகமான கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை குழம்ப வைப்பார்.
அந்தவகையில் தற்போது, எக்ஸ் தள பக்கத்தில், "யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், யார் உங்களை ஏமாற்றி, கவிழ்த்தார்கள் என்று கேல்வி எழுப்பி வருகிறார்கள்.
யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது.
— selvaraghavan (@selvaraghavan) August 28, 2026