சத்யராஜ், நயன்தாராவுக்காக 75 ஆயிரத்தை தூக்கிப்போட்ட நடிகர்!! கெஞ்சியும் அட்லீ செய்த காரியம்...
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது டாப் இந்திய இயக்குனராக திகழ்ந்து வருகிறார் அட்லீ குமார். ராஜா ராணி படத்தினை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த அட்லீ, அதனை தொடர்ந்து மெர்சல், தெறி, பிகில், ஜவான் போன்ற சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் படத்தினை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்கவிருக்கும் அட்லீ பற்றி கவின் நடித்த ஸ்டார் படத்தின் இயக்குனர் இளனின் தந்தையும் நடிகருமான பாண்டியன் ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
ராஜா ராணி படத்தில் நடிக்கும் போது நான் போட்டோகிராஃபராக இருந்தேன். கல்யாணத்துக்கு ஆர்டர் எடுத்து வைத்துவிட்டேன். அப்போது ஏ வெங்கடேஷ் சார் மலேசியாவில் ஒரு படத்தின் ஷூட்டிங் சம்பளம் 75 ஆயிரம் என்று கூறினார். ஆனால் ராஜா ராணி என்ற படத்தில் நடிக்கவுள்ளேன், சத்யராஜ், நயன் தாராவுடன் நடிக்க போகிறேன் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன்.
அப்போது 75 ஆயிரம் சம்பளத்தை மறுத்து ராஜா ராணி படத்தில் நடித்தேன். அங்கு என் சம்பளம் 3500 ரூபாய் தான் கொடுத்தாங்க. நாளைய இயக்குனர் படத்தில் 5 ஆயிரம் கொடுக்குறாங்க. நான் அட்லீயிடம் சென்று ஷார்ட் ஃபிளிம்ல 5 ஆயிரம் கொடுக்குறாங்க நீங்க 3000 ரூபாய் தர்றீங்களே என்று சொன்னேன்.
அட்லீ சிரித்தபடி 500 ரூபாய் சேர்த்து 3500 ரூபாய் கொடுத்தார். கேஷியரிடம் சென்ற போது என்னிடம் அவர், இந்த 3500 ரூபாய் வாங்குறதுக்கு கஷ்டப்படுற, படம் ரிலீஸ் ஆனதும் கூட ஒரு சைபர் சேர்த்துக்க 35 ஆயிரம் வாங்குவன்னு சொன்னாரு, அப்படியே 35 ஆயிரம் வாங்குனேன் என்று இயக்குனர் இளனின் தந்தை ஸ்டார் படத்தின் பிரஸ்மீட்டில் கூறியிருக்கிறார்.