முகேஷ் அம்பானியின் ரூ. 15000 கோடி ஆண்டிலியா வீட்டில் ஒரு AC கிடையாதா?
முகேஷ் அம்பானி
பிரம்மாண்டத்திற்கு பேர் போன கோடிஸ்வரர்களிலேயே உலகம் வியந்து பார்க்க கூடியவர் தான் முகேஷ் அம்பானி. ரூ. 9280 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அம்பானி, தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்தை உலகமே அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு நடத்தி முடிப்பார். அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பின், அவர்கள் பற்றிய சிறு செய்திகள் கூட வைரலாகி வருகிறது.
ஆண்டிலியாவில் NO AC
இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 27 மாடிகள் கொண்ட ஆண்டிலியா வீட்டின் மாத கரண்ட் பில் 70 லட்சம் ரூபாய் என்ற தகவலும் பரவியது. உலகத்தரம் வாய்ந்த பல வசதிகள் கொண்ட இந்த மாளிகையில் தனி உலகம் என்று சொல்லலாம்.
இந்நிலையில் இத்தனை ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆண்டிலியா விட்டில் ஏசியே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. எப்போது அனைத்து வீடுகளுக்கும் போடப்படும் ஏர் கண்டீஷனர் ஆண்டிலியா வீட்டிற்கு இல்லையாம்.
அதற்கு காரணம் ஏசி மாட்டினால் வீட்டின் வெளிப்புற அழகு கெட்டுவிடும். அதனால் வீட்டின் மையத்தில், அதாவது central air conditioning இருக்குமாம். இந்த ஏசி மூலம் வீட்டின் வெப்பநிலைக்கு ஏற்ப இந்த ஏசியின் குளிர்ச்சி மாறுபடும்.
ஆண்டிலியா வீட்டில் பளிங்கு மற்றும் சில பூக்கள் இருப்பதால் இவற்றை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்க ஏசி இப்படி வடிவமைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒவ்வொரு அறைக்கும் சரியாக 300 யூனிட் மின்சாரத்திற்கும் மேல் பயன்படுத்துவதாகவும் இதனாம் மொத்தமாக ஆண்டிலியா வீட்டிற்கு சராசரியாக 6 லட்சத்திற்கும் மேல் யூனிட் மின்சாரம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.