கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்! ஊரை ஏமாத்தரதுக்கு பெயர் ராஜதந்திரமா!

modi farmlaws
By Edward Nov 20, 2021 05:01 AM GMT
Report

இந்தியாவின் கடந்த சில மாதங்களுக்கு முன்னிலிருந்து தற்போது வரை வேளாண் சட்டத்திற்கு எதிராக பல விவசாயிகள் போராட்டத்தில் இருந்து பல நூறு உயிர்களை தியாகம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு ஆளுங்கட்சிகள் எதிர்த்து வேளாண் சட்டம் மக்களின் நலனுக்காக ஆரம்பித்தது என்று கூவி வந்தனர்.

ஆனால் நேற்றைய தினத்தன்று பாரத பிரதமர் பேசுகையில் விவசாயிகளில் நலன் கருத்தி வேளான் சட்டத்திற்கு போட்ட 3 சட்டங்கள் திரும்ப பெற்றுள்ளோம் என்ற அறிவிப்பை தெரிவித்தார்.

இதற்கு பலர் ஆதரவு கொடுத்து பாராட்டினாலும், அதில் அடங்கி இருக்கும் ராஜ தந்திரத்தை பலர் சுட்டிக்காட்டி வருகிறார்கள். சில மாதங்களில் நடத்த இருக்கும் 5 மாநிலங்களின் தேர்தல் தான் இதற்கு காரணமாம்.

பஞ்சாப், உபி மாநிலத்தில் தான் அதிக விவசாயிகள் போராடி வந்த நிலையில் அந்த மாநிலங்கல் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதன் முதல் அடிதான் வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றுள்ளது. இது என்ன ஒரு ராஜ தந்திரம்.