தம்பி ராமையா மகனுடன் இரவு நேரங்களில் ஊர் சுற்றும் நடிகை.. மகனை கண்டிக்காமல் யாஷிகாவிடம் சண்டை போடும் அப்பா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற யாஷிகா கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். 5 மாதமாக படுத்த படுக்கையில் இருந்த யாஷிகா அதிலிருந்து மீண்டு வந்து பழையபடி மாறியிருக்கிறார்.
தற்போது கிளாமரில் போட்டோஷூட்டை வாரி வழங்கி வரும் யாஷிகா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் டேட்டிங்கில் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது.
பிரபல தொலைக்காட்சி நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான உமாபதி ராமையாவுடன் யாஷிகா இரவு நேரங்களில் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இதனை தம்பி ராமையா பலமுறை கண்டித்து விட்டிருக்கிறார். அதை மீறியும் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தொடர்பில் இருந்து வந்ததால் யாஷிகாவிடம் பிரச்சனை செய்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட யாஷிகாவிற்கு தெரிந்தவர்கள் சொந்த மகனை வளர்க்க முடியவில்லை யாஷிகாவிடம் சண்டை போடுறீங்க என்று திட்டியும் வருகிறார்களாம்.
யாஷிகா ஏற்கனவே, நிரூப்புடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.