காஃபி குடிக்க தனிமையில் அழைத்த நடிகை ஜெயலட்சுமி.. கைது செய்யப்படுவாரா சினேகன்
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக திகழ்ந்து வரும் சினேகன் சமீபத்தில் நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன் சினேகம் என்ற அறக்கட்டளை ஒன்றினை ஆரம்பித்து உதவி செய்து வருகிறார்.
இந்த பெயரில் நடிகை ஜெயலட்சுமி போலிக்கணக்குகளை ஆரம்பித்து அதில் வரும் பணத்தை மோசடி செய்து வருவதாக சினேகம் போலிசாரிடம் புகாரளித்தார்.

அதன்பின் இருத்தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர் போலிசார். ஆனால் நடிகை ஜெயலட்சுமி, இந்த விசயத்தை விடாமல், சினேகனை காஃபி குடிக்க தனிமையில் அழைத்ததாக கூறியது பொய்.
நான் அப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று ஜெயலட்சுமி கூறியுள்ளார். இதுகுறித்த ஆதாரம் இல்லாமல் தவறாக ஒரு பெண்ணை அவமானப்படுத்துவீங்க என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஜெயலட்சுமி.
இதுகுறித்து சினேகன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து மனுத்தாக்கல் செய்ய போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். விரைவில் சினேகன் கைது செய்யப்படுவாரா என்பது வழக்கு விசாரணையில் தான் தெரியவரும்.