தனி ஓட்டலில் நடிகை ஜாக்குலின்! ரூட்டை மாற்றி எஸ்கேப்..
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின் சமீபத்தில் ஆண் ஒருவருடன் தனி அறையில் இருக்கும் புகைப்படம் லீக்காகி வைரலானது. இதுகுறித்து ஜாக்குலினை விமான நிலையத்தில் வழிமறித்து புடித்துள்ளனர் அமலாக்கத்துறையினர். கடந்த 2017ல் அதிமுக சார்ந்த இரட்டை இலை சின்னத்தை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் கொடுக்க முயன்றதற்காக ஒருசிலரை கைது செய்தனர்.
அதில் சுகேஷ் சந்திரசேகர் என்பவும் அடங்கும். கைது செய்து ஜெயிலில் இருக்கும்போதே மோசடி செய்து வைத்திருந்த 200 கோடி படத்தை வைத்து, 2கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்க பணம், 16 கோடியிலான சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அவருக்கும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கும் தொடர்புள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
அவர் வங்கி கணக்கிற்கு சுகேஷ் பணம் செலுத்தியை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த குதிரை, பூனை, நகை மற்றும் ஆபரணங்களை பரிசாக கொடுத்துள்ளார் சுகேஷ்.
மேலும் ஒரு முனை சென்னைக்கு தனி விமானத்தை அனுப்பி தனி அறையில் ஒன்றாக தங்கியிருந்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஜாக்குலிடன் விசாரிக்கையில் அவர் யார் என்றே தெரியாது என்று கூறி கதையின் ரூட்டை மாற்றி எஸ்கேப் ஆகியுள்ளார்.