பிரிவுக்கு பின்பும் ஜிவி பிரகாஷை மறக்காத மனைவி சைந்தவி!! வெளியான புது தகவல்..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிர்ச்சி கொடுத்து வரும் செய்தி என்னவென்றால் ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் பிரிவு. மிகப்பெரியளவில் பேசப்பட்டு வரும் இவர்களின் பிரிவு செய்தி பற்றி பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். தேவையில்லாத கருத்துக்களை கூறுபவர்களை கண்டித்து கூட ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிக்கையை வெளியிட்டனர்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில், பரஸ்பரமாக பிரிகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக சொன்னால் கூட அது மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த பக்கம் விசாரிக்கும், ஜிவி பிரகாஷுக்கு வேறொருவருடன் தொடர்பு இருக்கிறது, அதனால் தான் இந்த முடிவை எடுத்தார் என்கிறது தவறு. அதேபோல் ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்துக்கு தனுஷ் காரணம் என்று கூறுவதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயமான விஷயம்.
தனுஷை இந்த விவகாரத்தில் கொண்டு வருவது தவறு, சைந்தவியை தரைக்குறைவாக பேசுவது கேட்கவே சகிக்கவில்லை. சைந்தவியும் வேறொரு தொடர்பு இருக்கிறது என்று விசாரித்ததில் எதுவும் தெரியவில்லை. அதனால் ரொம்ப சீக்கிரமாக இருவரும் இணைய வாய்ப்பு இறுப்பதாக தான் நான் பார்க்கிறேன் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 24 ஆண்டு கால நட்பு இனியும் தொடரும் என்று தெரிவித்த சைந்தவி பற்றிய ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. என்னதான் ஜிவி பிரகாஷ் குமாரை விட்டு பிரிந்துவிட்டேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தாலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரகாஷ் என்ற கணவரின் பெயரை சைந்தவி இன்னும் எடுக்கவில்லை. அவருடன் எடுத்த புகைப்படங்களையும் சைந்தவி எடுக்கவில்லை. இதனால் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
